×

முளைப்பாரி ஊர்வலம் செட்டியார்பட்டி பேரூராட்சியில் சேதமடைந்த அங்கன்வாடி மையம் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சம்

ராஜபாளையம், அக். 17: ராஜபாளையம் அருகே, சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  ராஜபாளையம் அருகே, செட்டியார்பட்டி பேரூராட்சி, 6வது வார்டு புனல்வேலி பெருமாள் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் திடலில், அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 25 குழந்தைகள் வரை உள்ளனர். இந்நிலையில், அங்கன்வாடி மையக் கட்டிடம் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. மழை காலங்களில் மேற்கூரை வழியாக நீர் கசிகிறது. இதனால், குழந்தைகள் நனையும் அவலம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த மையம், கர்ப்பிணிகள் தடுப்பூசி போடும் மையமாகவும் செயல்பட்டு வருகிறது. மேலும், அங்கன்வாடி மையம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால், குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அஞ்சுகின்றனர். கர்ப்பிணிகளும் தடுப்பூசி போடுவதற்கு வருவதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, குழந்தைகள், கர்ப்பிணிகளின் நலன் கருதி, சம்மந்தப்படட அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Parents ,children ,Chettiarpatti ,Anganwadi Center ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...