×

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? சேடபட்டி அருகே மாணவி கொலை வழக்கில் தேடப்பட்டவர் சரண்

உசிலம்பட்டி, அக். 17: சேடப்பட்டி அருகே 11ம் வகுப்பு மாணவி கொலை வழக்கில் தேடப்பட்டவர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியம், ஓணாப்பட்டி அருகே மலையடிவாரப் பாறைப்புதருக்குள் கடந்த அக்.14ம் தேதி 11ம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கில் இதே ஊரைச்சேர்ந்த அம்மாவாசி மகன் மாதவனை சேடபட்டி போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.அதில் மாதவனும், உடன் பிறந்த சகோதரர் மது (25) ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான மதுவை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஜே.எம்.2 நீதிபதி ராஜேஸ்குமார் முன்னிலையில் மது நேற்று சரண்டரானார். அவரை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பின்னர் மது மதுரை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

Tags : Saran ,Setapatti ,
× RELATED ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்