×

வேடசந்தூரில் நிலவேம்பு கசாயம் விநியோகம்

வேடசந்தூர், அக். 17:வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு மருத்துமனை சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முதன்மை மருத்துவர் அன்புசெல்வன், பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியன் தலைமை வகித்தனர். சித்தா பிரிவு மருத்துவர் கோவிந்தராஜ் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.    இதில் பள்ளி ஆசிரியர்கள் சரவணன், யுவராஜ், கதிரவன், ஷேக்பரித், ஆண்டிவேல், பாஸ்கர், சித்தா பிரிவு பணியாளர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Vedasandur ,
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது