×

நாமக்கல்லில் ஒரே நாளில் 2 அரசு பஸ் ஜப்தி

நாமக்கல், அக்.17: நாமக்கல்லில்,  ஒரே நாளில் 2 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. நெல்லை  மாவட்டம் சங்கரன்கோயிலை அடுத்த குருவிகுளத்தை சேர்ந்த ஜெயமணி மகன் கபில்  ஜோதி (26). இவர் கோவையில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.  இவர் கடந்த 2006 பிப்ரவரி 25ம் தேதி சேலத்தில் இருந்து மதுரைக்கு, சேலம்  கோட்ட அரசு பஸ்சில் சென்றபோது, கீரம்பூரில் பஸ், லாரி மீது மோதி  விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த கபில்ஜோதி, அரசு  போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்ககோரி, நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த, நீதிமன்றம் ₹3.39  லட்சம் இழப்பீடு வழங்க போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால்  போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து நிறைவேற்று மனு  தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி லதா, சேலம் கோட்ட அரசு  பேருந்தை ஜப்தி செய்யும் படி உத்தரவிட்டார். அதன்படி நேற்று, நாமக்கல்  பேருந்து நிலையத்துக்கு வந்த சேலம் கோட்ட அரசு பேருந்தை, நீதிமன்ற  அமினாக்கள் ஜப்தி செய்தனர்.
அதேபோல் புதுச்சத்திரம் அருகே உள்ள  சின்னதொட்டிப்பட்டியை சேர்ந்த டெய்லர் குணசேகரன் (55). இவர் கடந்த 7  ஆண்டுக்கு முன் மொபட்டில் சென்ற போது, அரசு பேருந்து மோதியதில் படுகாயம்  அடைந்தார். இதையடுத்து அவர் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கக்கோரி  நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கை விசாரித்த நீதிமன்றம், ₹1.16 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.  ஆனால் போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதனால் குணசேகரன் நிறைவேற்று மனு  தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி லதா, சேலம் கோட்ட ஜப்தி செய்ய  உத்தரவிட்டார். அதன்படி நாமக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று அரசு   பேருந்தை நீதிமன்ற அமினாக்கள் ஜப்தி செய்தனர். நேற்று ஒரே நாளில் விபத்து  வழக்கில் இழப்பீடு வழங்காத 2 அரசு பஸ்கள், நாமக்கல்லில் ஜப்தி செய்யப்பட்டது.

Tags : Namakkal ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை