×

திருமலைராயன்பட்டினத்தில் மாணவரை நீண்டநேரமாக முட்டிபோட வைத்த ஆசிரியை

காரைக்கால், அக்.17:காரைக்கல் திருமலைராயன்பட்டினத்தில் 12 வயது மாணவரை தாக்கி, நீண்ட நேரம் முட்டிபோட வைத்த, தனியார் பள்ளி ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.காரைக்கால் திருமலைராயன்பட்டினம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில், நிரவியை சேர்ந்த நவ்ய பிரசாத் (12) 7ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் நவ்ய பிரசாத்திடம் அப்பள்ளி ஆசிரியை மாலதி பள்ளி ரேங்கார்டில் கையெழுத்து போட, பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். ஆனால், மாணவனோ பெற்றோர் கோவிலுக்கு சென்றிருப்பதால் அழைத்துவர முடியவில்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, மாணவரை கன்னம், கழுத்துப்பகுதியில் அடித்து, நீண்ட நேரம் வகுப்பறையில் முட்டிப்போட வைத்ததாக கூறப்படுகிறது.மாலை வீட்டுக்கு சென்ற மாணவர் நவ்யபிரசாத்துக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு, காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் டாக்டர் மற்றும் பெற்றோர் விசாரித்தபோது, பள்ளியில் நடந்ததை மாணவர் நவ்யபிரசாத் கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் விமலா மற்றும் நிர்வாகிகள் பள்ளி மாணவர்? தாக்கியது குறித்து பள்ளி மற்றும் மாணவரிடம் நேரில் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, மாணவரின் பெற்றோர் திருமலைராயன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எஸ்.ஐ பெருமாள் மற்றும் போலீஸார், தனியார் பள்ளி ஆசிரியை மாலதி மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், காரைக்கால் சேத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவ,ர் சீனியர் மாணவர்களால் ராக்கிங் செய்து தாக்கப்பட்டதில், அந்த மாணவன் காரைக்கால் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Teacher ,student ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...