×

பெற்றோர் சங்கம் வலியுறுத்தல் சீர்காழியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்

சீர்காழி, அக்.17: சீர்காழி சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் அரசு மருத்துவமனை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. சித்த மருத்துவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். முகாமில் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் சீர்காழி ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ், பொருளாளர் சேகர், அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு மருந்தாளுனர் தாமரைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்: வேதாரண்யத்தை தாலுகா பஞ்நதிக்குளம் மேற்கு நக்கீரனார் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினர்.வாய்மேடு அரசு சித்த மருத்துவமனை மருத்துவர் கவிதா தலைமை வகித்து நிலவேம்பு கஷாயத்தை பள்ளி மாணவர்களுக்கு கொடுத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கவிஞர் சத்யசிவம் உள்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாமை வேதாரண்யம் சித்த மருத்துவமனை மருத்துவர் ரமேஷ் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை வழங்கினார்.


Tags : Parents Association Emphasis ,Earthquake Drinking Water Supply Camp ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...