புதுச்சேரி, அக். 17: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனா (எ) புவனேஸ்வரனை ஆதரித்து சங்கரதாஸ் நகர், தேவகி நகர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்எல்ஏ கூறியதாவது:- தமிழக அதிமுக முதல்வர் இபிஎஸ்சும், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும் இணைந்துதான் சென்னையில் அதிமுக கூட்டணியில் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்தார்கள். என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக இருக்கிறதா? என முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்புகின்றார்.காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து சோனியா, ராகுல், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆகியோர் பிரசாரத்திற்கு வந்தார்களா? இவர்களே வராத நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை ஏன் அழைத்து வருகின்றார். ரங்கசாமி ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றி வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.