×

கடைக்கு வாடகையை உயர்த்த கோரிக்கை

காரைக்கால், அக். 17:    இந்து மக்கள் கட்சியின் அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் காரைக்காலில் நடந்தது. மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். தேசிய தலைவர் தரன், தேசிய துணை தலைவர் லோகேஷ், தமிழக மாநில தலைவர் கோவிந்தராஜ், புதுச்சேரி மாநில தலைவர் மஞ்சினி மற்றும் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, தேசிய தலைவர் தரன் நிருபர்களிடம் கூறும்போது, காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான இடங்களில், கடந்த பல ஆண்டுகளாக இயங்கிவரும் கடை, அலுவலகம், வணிக நிறுவனங்களுக்கு, கடந்த 40 ஆண்டுகளாக வாடகை உயர்த்தப்படவில்லை. ரூ.20 ஆயிரம் வாடகை வாங்க வேண்டிய இடத்திற்கு வெறும் ரூ.2 ஆயிரம் மட்டுமே வாங்கப்பட்டு வருவது வேதனையானது. இதனால் பல கோயில்கள் வருவாய் இன்றி உள்ளது. மேலும் பல கோயில் இடங்கள் அரசியல்வாதிகளால் ஆக்கிரமிப்பில் உள்ளது. இது குறித்து கலெக்டர் உரிய ஆய்வு மேற்கொண்டு, இன்றைய சந்தை நிலவர அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்து கோயில் வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அனுமன் சேனா அமைப்பு சார்பில் ஆக்கிரமிப்பு மீட்புக்குழு அமைக்கப்பட்டு இடத்தை மீட்டு அரசிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்படும்
என்றார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...