கடலூர், அக். 17: பண்ருட்டி அருகே கொட்டி கோணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். லாரி டிரைவர். நேற்று லாரியில் செம்மண் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். சன்னியாசிபேட்டையை சேர்ந்த சிவசந்திரன் (30), சதீஷ்குமார் (29) ஆகிய இருவரும் லாரியை வழிமறித்து சிவப்பிரகாசத்தை இரும்பு பைப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தாக்குதல் சம்பவம் பற்றி அவர் அளித்த புகாரின்பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவசந்திரனை தேடி வருகின்றனர்.