×

மாவட்டம் மழை காலங்களில் பணியாளர்கள் கடும் அவதி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சாத்தூர், அக். 16: சாத்தூர் முக்குராந்தலில் மத்திய, மாநில அரசை கண்டித்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  சிஐடியூ கன்வீனர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டசெயலாளர் தேவா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘இ.மோட்டர் என்ற பெயரில் மோட்டார் தொழிலை அழிவு பாதைக்கு தள்ளாதே, வாகனப் பதிவு, வாகன புதுப்பித்தல், இன்ஸ்சூரன்ஸ், சுங்கச்சாவடி வசூல் போன்றவற்றில் பகல் கொள்ளை அடிக்காதே, ஆர்டிஒ அலுவலங்களை மூடத்திட்டம் போடாதே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்து, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படாதே உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள், அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சிஐடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags : State Govt ,Central ,State Transport Workers Protest ,
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...