×

உறவினர்கள் கதறல்

உத்தமபாளையம், அக்.16: உத்தமபாளையம் முல்லையாற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவரின் உடல் 5 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.உத்தமபாளையம் ஆர்.சி.தெருவை சேர்ந்த மாத்யூ மகன் பிரவீன்குமார்(18). இவர் தனது நண்பர் தேவாரத்தை சேர்ந்த கதிரவன் என்பவருடன் கடந்த 11ம் தேதி உத்தமபாளையம் முல்லையாற்றில் குளிக்க சென்றார். இருவரும் கோட்டூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் வருடம் படித்து வந்தனர். ஆற்றில் குதித்தவுடன் பிரவீன்குமாரை தண்ணீர் இழுத்து சென்றது. இதனை அடுத்து இவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரவீன்குமார் என்ன ஆனார் என தேடி வந்தனர். உத்தமபாளையத்தில் காணாமல் போனதாக போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆற்றில் காணாமல் போனதால் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடி வந்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று மதியம் போடி-வீரபாண்டி குண்டலநாயக்கன்பட்டியில் அழுகிய நிலையில் பிணம் ஒன்று மிதப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்று இறந்த நிலையில் கிடந்த பிரவீன்குமார் உடலை கைப்பற்றினர். சம்பவம் பற்றி வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவரது உடல் பிரேத பரிசோதனை செய்ய தேனி மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. காணாமல் போனதால் தங்களது பிள்ளையின் நிலை என்ன என 5 நாட்களாக கதறி வந்த உறவினர்கள் பிரவீன்குமார் இறந்து கிடந்தார் என தகவல் கிடைத்ததும் அழுதது உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.



Tags : Relatives ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...