×

வருசநாடு கிராமமக்கள் வலியுறுத்தல் மழை வேண்டி நடப்பட்ட மரக்கன்றுகள்

போடி, அக்.16:  போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் கிராமப்புற தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.தேனி மாவட்ட கிராம, நகர்ப்புற பொது சேவை மைய கிராமப்புற தொழில் முனைவோர் நலச் சங்க ஆலோசனை கூட்டம் போடி அருகே சில்லமரத்துப்பட்டி அன்னை தெரசா நர்சரி பள்ளியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செல்வேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் நாகராஜ், பொருளாளர் ரஹ் மத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பொது சேவை மையங்களை நடத்தும் கிராமப்புற தொழில்முனைவோர் ஏழாவது பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்பது குறித்தும், மத்திய அரசின் கணினி பயிற்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கூட்டத்தில் போடி, தேனி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி வட்டங்களை சேர்ந்த பொது சேவை மையங்களை நடத்தும் கிராமப்புற தொழில் முனைவோர்கள் பலர் பங்கேற்றனர்.


Tags :
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கில் முதியவர் சாவு?