×

லஞ்சம்: தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருப்பூர், அக். 16: திருப்பூரில் பிரேத பரிசோதனையை விரைந்து முடிக்க பணம் வாங்கிய போலீஸ் ஏட்டை ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் சுரேஷ் என்பவர் தலைமை போலீசாக பணியாற்றி வந்தார். இவர் பொதுமக்கள் ஒருவரிடம் பிரேத பரிசோதனையை விரைந்து முடிக்க போலீசார் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை விரைந்து முடிக்க பணம் வாங்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இது குறித்து மாநகர போலீஸ் அதிகாரிகள் வடக்கு உதவி கமிஷனர் வெற்றிவேந்தனை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

இதயைடுத்து சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் அறிக்கையை போலீஸ் தலைமைக்கு அனுப்பிவைத்தார். அந்த அறிக்கையின் பேரில் நேற்று போலீஸ் ஏட்டு சுரேஷை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார். மேலும் அவரிடம் இறுதிகட்ட நடவடிக்கைக்கான விசாரணை நடப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chief Guard ,Armed Forces ,
× RELATED அரியலூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு..!!