×

நொய்யலாற்றின் கிளை ஓடையில் பெண் குழந்தை மீட்பு

திருப்பூர், அக். 16:  திருப்பூரில் நொய்யலாற்றின் கிளை ஓடையில் பெண் குழந்தையை வீசிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள காயிதே மில்லத் நகர் நொய்யலாற்றின் கிளை ஓடை கரை பகுதியை ஒட்டி குழந்தை அழுகுரல் கேட்டுள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் ஓடிச் சென்று பார்த்த போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று புதர் மறைவில் கிடந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அருகில் இருந்த பொதுமக்கள் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து குழந்தை திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Neyyalartha ,branch ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...