×

கடன் பிரச்னை காரணமாக தொழிலாளி சாணிப்பவுடர் குடித்து தற்கொலை

திருப்பூர், அக். 16:   திருவண்ணாமலை மாவட்டம், கந்தபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சமியுல்லா (47). இவருக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர். இவர்கள் திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர் பின்னலாடை சார்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சமியுல்லா கடந்த சில ஆண்டுக்கு முன் தொழில் துவங்குவதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் பணத்தை திருப்பி கொடுக்காததால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை வலியுறுத்தியுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த சமியுல்லா, ஹார்வி ரோடு சிட்கோ பகுதியில் சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.   இது குறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை