×

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

திருப்பூர், அக். 16:  திருப்பூரில் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். திருப்பூர், பூலுவபட்டி, விக்னேஸ்வரா நகர் 2வது வீதியை சேர்ந்தவர் சுபாஷ் (27). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. சுபாஷ் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாமல் போனதால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Plaintiff ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை