×

கனமழையால் நிரம்பிய கெத்தை அணை திறப்பு

மஞ்சூர், அக்.16:   நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை அணைகளுக்கு நீர் வரத்து அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இந்த மழையால் கெத்தை அணை நிரம்பியது. இதை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி நேற்று காலை 8மணியளவில் மின்வாரிய அதிகாரிகள் முன்னிலையில் அணை திறந்து விடப் பட்டது. சுமார் 1மணி நேரம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் பரளி, பில்லூர் மின்நிலையங்களில் மின்சார உற்பத்தி தீவிரப்படுத்தப்பட்டது. முன்னதாக, கெத்தை அணை திறந்து விடப்படுவதை முன்னிட்டு முள்ளி, பில்லூர் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

Tags : Opening ,Kettu Dam ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா