×

உல்லாசத்திற்கு அழைத்து வாலிபரிடம் செயின் பறிப்பு

மதுரை, அக்.16: உல்லாசமாக இருக்க அழைத்துச்சென்று, வாலிபரிடம் செயின், மோதிரத்தை பறித்த மதுரை தம்பதியை போலீசார் கைது செய்தனர்.சிவகாசியை சேர்ந்தவர் சக்திகணேஷ் (32). அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். தொழில் விஷயமாக மதுரை வந்த இவர், அண்ணாநகரில் உள்ள ஒரு கடையில் டீ சாப்பிட்டு கொண்டிருந்தார். அவரை சந்தித்த ஒரு வாலிபர், பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க வருகிறீர்களா என கேட்டுள்ளார். ஆசைப்பட்ட சக்திகணேஷ் அந்த வாலிபருடன் சென்றார். கோமதிபுரத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச்சென்ற அந்த வாலிபர், அங்கு சக்திகணேசை மிரட்டி அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயின், 7 கிராம் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு விரட்டியடித்து விட்டார்.இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் சக்திகணேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்தனர். விசாரணையில், சக்தி கணேஷை அழைத்து சென்றது ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்த தினேஷ் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து தினேஷ், உடந்தையாக இருந்த அவரது மனைவி கலைச்செல்வியை (28) போலீசார் கைது செய்தனர்.

Tags : picnic ,
× RELATED 10 அழகிய கிராமங்களில் கொல்லங்கோடு தேர்வு- அதிகாரிகள் ஆய்வு செய்தனர்