×

நிலக்கோட்டை அருகே நூலகம் சூறை

வத்தலக்குண்டு, அக். 16: நிலக்கோட்டை அருகே நூலகத்தை சூறையாடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி செல்லும் சாலையில் உள்ளது முசுவனூத்து கிராமம். இங்கு சுமார் 500 வீடுகள் உள்ளன. 2000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த நூலகத்தில் புகுந்த மர்மநபர்கள் நூலகரின் லாக்கர், சேர்கள் உள்ளிட்ட அலுவலக பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் அங்கிருந்த புத்தகங்களையும் அள்ளி கொண்டு, நூலகத்தின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரையும் உடைத்து சேதப்படுத்தி தப்பிவிட்டனர். நேற்று நூலகர் பழனியாண்டி திறக்க சென்ற போது நூலகம் சூறையாடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்ததும் நிலக்கோட்டை போலீசார் நூலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து பழநியாண்டி அளித்த புகாரின்பேரில் போலீசார் நூலகத்தை சூறையாடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Nilakkottai ,
× RELATED நிலக்கோட்டை தொகுதி மவிகவுக்கு...