ஈரோடு, அக்.16: கோபி மண்டல துணை வட்டாட்சியர் உத்திரசாமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட குழுவினர் கடந்த 13ம் தேதி இரவு கோபி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.கணபதிபாளையம் போலீஸ் செக்போஸ்ட் வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது 40 சாக்கு மூட்டைகளில் பவானி ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அப்போது சரக்கு வேனில் இருந்த பாலு உள்ளிட்ட 2 தொழிலாளர்கள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, சரக்கு வேன் மற்றும் வேன் டிரைவர் சந்தோஷ்குமார் ஆகியோரை கோபி போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.