×

மாநில அளவிலான போட்டிகளில் திருவள்ளுவர் கல்லூரி மாணவர்கள் சாதனை

வி.கே.புரம், அக்.16: பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி கணிதத்துறை மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர். ஆலங்குளம் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் 20கே9 என்ற போட்டி நடந்தது. 11 கல்லூரிகளைச் சார்ந்த 165 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி கணிதத்துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் மைன் என்ற தலைப்பில் நடந்த போட்டியில் மாணவிகள் புஷ்பலட்சுமி, ஜெய்ஏஞ்சல், சலேபிரேமி, அப்ரின்பானு, அனுசுயா ஆகியோர் முதலிடத்திலும், மாக்ஸ்மாடல்மேக்கிங் என்ற தலைப்பில் நடந்த போட்டியில் மாணவிகள் யாசிகா, வேதஜானகி, சுஹாசினி ஆகியோர் இரண்டாவது பரிசையும், சயின்ஸ் ஸ்டேட்ஸ் கிரியேஷன் என்ற தலைப்பில் நடந்த போட்டியில் மாணவர்கள் சிவசங்கர், ராஜ் ஆகியோர் 2வது பரிசையும் பெற்றனர்.
ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் நடந்த மாநில அளவிலான கணித வினா விடை போட்டியில் மாணவிகள் சுந்தரதெய்வு, செல்வ
ஆனந்தி, இந்துமதி ஆகியோர் 2ம் பரிசை பெற்றனர்.  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் சுந்தரம், நிர்வாக அதிகாரி நடராஜன், கணிதத்துறை தலைவர் அண்ணாதுரை மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Tags : Level Competitions ,Thiruvalluvar College Students Achieve State ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் தேசிய அளவிலான...