×

உலக கை கழுவும் தினம் கீழப்பழுவூர் அருகே குடும்ப தகராறால் இளம்பெண் தற்கொலை

அரியலூர்,அக்.16: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருமானூர் அருகேயுள்ள மேலப்பழுவூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ரஷ்யாதேவி(27). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த ரஷ்யாதேவி நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக ரஷ்யாதேவியின் தந்தை தனபால் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : teenager ,suicide ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை