×

எஸ்பி அறிவுறுத்தல் லோடு ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது

தா.பழூர், அக். 16: தா.பழூர் அருகே லோடு ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். மேலும் லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.தா.பழூர் அடுத்த சிலால் வால்பட்டறை அருகே அணைக்குடம் கிராம நிர்வாக அலுவலர் அனிதா மற்றும் அவரது உதவியாளள் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தா.பழூர் பகுதியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற லோடு ஆட்டோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஜெயங்கொண்டம் சீனிவாசா நகர் 7வது தெருவை சேர்ந்த பழனி மகன் அய்யப்பன் (24) என்பவர் லோடு ஆட்டோவில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை விசாரித்த போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தா.பழூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தா.பழூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்ததுடன் அய்யப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Sand hijacker ,SP ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்