×

நூறுநாள் வேலை ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் ரூ.5,000 வழங்க வலியுறுத்தல்

காரைக்கால், அக்.16: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட ஊழியர்களுக்கு, தீபாவளி முன்பணம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட ஊழியர்கள் சங்கத் தலைவர் பழனிவேல், செயலாளர் சுரேஷ் ஆகியோர், புதுச்சேரி ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனருக்கு கூட்டாக அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
கடந்த 11 ஆண்டுகளாக இத்திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். எனினும் புதுச்சேரி அரசு எவ்வித சலுகையும் அளிக்கவில்லை. குறைந்த ப்பட்சம் ஆண்டுக்கு 8 நாள்கள் சாதாரண விடுப்பு, 15 நாள்கள் மருத்துவ விடுப்பு, 30 நாள்கள் பிரசவ கால விடுப்பு அளிக்க பலமுறை வலியுறுத்தியும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, இக்கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்.முக்கியமாக, தீபாவளி பண்டிகை வருவதால், ஊழியர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய, ஊழியர்களுக்கு தீபாவளி முன் பணமாக குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பருவ மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் ஊழியர்களுக்கு மழைக் கோட் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Diwali ,Rs ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...