×

வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு எலிப்பொறி வழங்கல்

கொள்ளிடம், அக்.16: நாகை மாவட்டம், கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அத்மா திட்டத்தின் கீழ் எலிக்கட்டுப்பாடு செயல் விளக்கத்திற்காக விவசாயிகளுக்கு எலிப்பொறி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு செயல் விளக்கத்திற்காக எலிப்பொறிகளை வழங்கி செயல் விளக்கம் செய்து காட்டினார். ஆலாலசுந்தரம், சந்தப்படுகை, மகாராஜபுரம், தாண்டவன்குளம் மற்றும் எடமணல் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு எலிப்பொறிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அத்மா திட்ட மேலாளர் ரேகா, வட்டார வேளாண் அலுவலர் விவேக், இயற்கை விவசாயி பன்னீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Department of Agriculture ,
× RELATED நாட்டுப் பசுவில் நன்மைகள் அதிகம்: வேளாண்துறை தகவல்