×

தாந்தோணி காமராஜ் நகரில் குப்பைகளை முறையாக அகற்றாததால் சுகாதார கேடு

கரூர், அக். 16: கரூர் தாந்தோணி பகுதி காமராஜ் நகரில் குப்பைகளை முறையாக அகற்றாததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதுகரூர் தாந்தோணி பகுதி காமராஜ் நகர் பகுதியில் முறையாக குப்பைகளை அகற்றுவதில்லை. குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. விடுமுறை நாட்களில் குப்பைகளை சேகரிக்கும் வண்டிகள் வருவதில்லை. இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் சுகாதாரப் பிரிவினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் குப்பைகள் தெருவோரம் குவிந்து கிடக்கிறது. தாந்தோணி நகராட்சியாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. தாந்தோணியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் இது குறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்த பிரச்னை குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். சுகாதாரப் பிரிவினர் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : city ,Dandani Kamaraj ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...