×

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

திருவெண்ணெய்நல்லூர், அக். 16: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்தி குப்பம் மலட்டாறு பகுதியில் தொடர்ந்து மர்ம நபர்கள் மணல் கடத்தி செல்வதாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டியை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.  
அப்போது திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சின்னசெவலை  கிராமத்தை சேர்ந்த வீரப்பன் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். பின்பு அவரை உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை