திருக்கோவிலூர், அக். 16:திருக்கோவிலூர் அருகே ஆவியூர் கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகன் மாரிமுத்து (39). இவர் வேட்டவலம் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரது பால் ஸ்டோரில் கடந்த ஒன்றரை வருடமாக பால் ஊற்றி வந்துள்ளார். இதில், ரூ.5 ஆயிரம் பாக்கி தர வேண்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருக்கோவிலூர் ஏரிக்கரை பகுதியில் மாரிமுத்து நின்றிருந்தபோது, அந்த வழியாக வந்த கோபாலிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மாரிமுத்துவை கோபால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த மாரிமுத்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ உலகநாதன் வழக்கு பதிவு செய்து கோபாலை கைது செய்தார்.