×

சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு தாய், மகன் கைது

திட்டக்குடி, அக். 16: திட்டக்குடியில் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்ட தாய், மகன் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
திட்டக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 12ம் தேதி துப்புரவு பணி நடைபெற்றது. அப்போது அதே பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக வேலை பார்க்கும் வதிஷ்டபுரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஹேமலதா மகன் விக்னேஷ்வரன் என்பவர் பள்ளியில் நடைபெற்ற துப்புரவு பணியை செல்போனில் படம் பிடித்துள்ளார்.
 இதுபற்றி தலைமை ஆசிரியை அமுதா கேட்ட போது, அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அமுதா திட்டக்குடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது, சப்-இன்ஸ்பெக்டரிடமும் விக்னேஷ்வரன், அவரது தாயார் ேஹமலதா ஆகியோர் தகராறு செய்ததுடன் மிரட்டல் விடுத்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் விசாரணை நடத்தி, ஹேமலதா, அவரது மகன் விக்னேஷ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Tags : dispute ,Sub-Inspector ,
× RELATED தளவாபாளையம் அருகே பதுக்கி வைத்து மது விற்றவர் கைது