×

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் அதிரடி கைது

கடலூர், அக். 16: சிதம்பரம் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் கடந்த மாதம் 22ஆம் தேதி மேலகுண்டலபாடி ரயில்வே கேட் அருகில் சாராய கடத்தல் தடுப்பு தொடர்பாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வல்லம்படுகை அடுத்த பேராம்பட்டை சேர்ந்த ராமலிங்கம் (29) என்பவர் 120 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சாராய வியாபாரி ராமலிங்கத்தை கைது செய்தனர்.
விசாரணையில் இவர் மீது சிதம்பரம் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் சிதம்பரம் காவல் நிலையத்தில் 6 சாராய வழக்குகள் இருப்பது தெரியவந்தது. தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த ராமலிங்கம் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட எஸ்பி அபிநவ் பரிந்துரையின்பேரில் ஆட்சியர் அன்புச்செல்வன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சாராய வியாபாரி ராமலிங்கம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Tags : Alcohol dealer ,
× RELATED குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது