×

சேலம் சிறையில் கைதி திடீர் சாவு

சேலம், அக்.16: சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாமக்கல்லை சேர்ந்த கொலை வழக்கு விசாரணை கைதி, நேற்று அதிகாலை திடீரென உயிரிழந்தார். இதுபற்றி மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள காவேரிநகர் காந்தியடிகள் தெருவை சேர்ந்தவர் குருசாமி (60). இவர், கடந்த 2014ம் ஆண்டு தனது தம்பி மனைவி மாதம்மாள் என்பவரை கொலை செய்ததாக குமாரபாளையம் போலீசார், கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அவரை அடைத்தனர். இந்த கொலை வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி குருசாமிக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே வார்டன்கள், அவரை மீட்டு சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு, கைதி குருசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கைதி சாவு பற்றி சிறை சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் விசாரணை நடத்தினார்.இதனிடையே கைதி சாவு பற்றி அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சேலம் ஜே.எம்.3 மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார். சிறையில் கைதி திடீரென நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு இறந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Death ,prisoner ,jail ,Salem ,
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...