×

கெங்கவல்லியில் ₹1.51 கோடியில் புதிய தீயணைப்பு நிலையம்

கெங்கவல்லி,  அக். 16: கெங்கவல்லியில் ₹1.51 கோடி மதிப்பில் புதிதாக தீயணைப்பு நிலையம்  கட்டப்பட உள்ள இடத்தை, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் நேற்று நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேலம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர்  விஜயகுமார், நேற்று கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்தில்  திடீர் ஆய்வு  மேற்கொண்டனர். அவர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை,  பணியாளர்கள் பயிற்சி, தீயணைப்புத்துறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள்  மற்றும் வாகனங்களையும்  ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கெங்கவல்லி  தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடுவலூர்  ஊராட்சிக்குட்பட்ட கெங்கவல்லி - புங்கவாடி சாலையில் தேர்வு செய்யப்பட்ட  இடத்தையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வுக்கு பின் மாவட்ட அலுவலர்  விஜயகுமார் கூறுகையில், கெங்கவல்லியில் புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம்  கட்டுவதற்கு ₹1.51கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, தீயணைப்புத்துறை  இயக்குனர் காந்திராஜன் தெரிவித்துள்ளார். இதையடுத்து 2மாதங்களில்  கெங்கவல்லியில் புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டு  பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.
இந்த ஆய்வின் போது கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் உடனிருந்தனர்.

Tags : fire station ,Kengavalli ,
× RELATED அரசமரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்