×

அப்துல்கலாம் பிறந்தநாளில் மதுபான கூடங்களை மூட கோரிக்கை

சேலம், அக்.16: அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி அரசு விடுமுறை அளித்து, மதுபானகூடங்களை மூட வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் மனு அளித்துள்ளனர். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனிடையே, தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையிலானோர், சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை அளித்தனர். அதில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், பல்வேறு சாதனைகளை புரிந்து, உலகமே போற்றும் வகையில் வாழ்ந்தார். மாமேதையாக திகழ்ந்த அவரது பிறந்தநாளான அக்டோபர் 15ம் தேதியை அரசு விடுமுறை அளிப்பதுடன், அன்றைய தினம் அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும். மேலும், மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும், என கோரிக்கை விடுத்திருந்தனர்.

Tags : liquor stores ,birthday ,Abdulkalam ,
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி