×

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த பேச்சு போட்டிகளில் மாணவிகள் சாதனை

பரமத்திவேலூர், அக்.16: அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் திருச்செங்கோட்டில் பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டியில் ஜேடர்பாளையம் ஆர்கேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில். திருச்செங்கோட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையேயான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் ஜேடர்பாளையம் ஆர் கே வி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி பிரபாஸ்ரீ கட்டுரைப் போட்டியில் முதல் பரிசையும், 9ம் வகுப்பு மாணவி அனுராகா பேச்சுப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றனர். கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற பிரபாஸ்ரீக்கு ₹10 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் சான்றிதழும், ஆறுதல் பரிசு பெற்ற அனுராகாவுக்கு ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கி பாராட்டினர். பரிசு பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர், இயக்குனர்கள், முதல்வர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Namakkal West District DMK Speech Competition ,
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு