×

தொழிலக பாதுகாப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஓசூர், அக்.16: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓசூரில் இயங்கி வரும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள 1 அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்புக்கு மேல் கல்வித் தகுதியுடைய BC/MBC/SC/SC(A)/ST வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை. இப்பணிக்கான அறிவிப்பு htttp://dish.tn.gov.in என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் மற்றும் கல்வித் தகுதிகள் ஆகியவற்றை இவ்வலைதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 31ம் தேதிக்குள் இணை இயக்குநர், தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகம், 3/2-A முதல் தளம் சீதாராம் நகர், என்.எச்.கிருஷ்ணகிரி ரோடு, ஓசூர்-635109 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Occupational Safety Office ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு