×

அரசு கல்லூரியில் என்எஸ்எஸ் விழா

ஓசூர், அக்.16:ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணிதிட்டத்தின் 50வது ஆண்டு பொன் விழா கொண்டாடப்பட்டது. நலப்பணிதிட்ட விழாவையொட்டி கல்லூரி அருகே உள்ள முக்கிய சாலைகளில் பேரணி நடைபெற்றது. பேரணியை கல்லூரி முதல்வர் நாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் தீபா வரவேற்றார். ஆங்கில துறை தலைவர் மணிமேகலை மற்றும் தமிழ்துறை தலைவர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.   சமூக மற்றும் இயற்கை ஆர்வலர் லட்சுமணன், ஓசூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூய்மைப்படுத்துதல், மழைநீர் சேகரித்தலின் அவசியத்தை குறும்படங்கள் மூலம் மாணவர்களுக்கு விளக்கினார். சமூக மற்றும் இயற்கை ஆர்வலர் தாமஸ் ஜான், உடல் உறுப்பு தானம் குறித்தும், டாக்டர் ஜெகன் ஆரோக்கியத்தின் அவசியம் குறித்தும் பேசினர். தொடர்ந்து, மாணவர்கள் பாடல்கள், நடனம் மற்றும் நாடகங்கள் மூலம் நீர் சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தனர். நாட்டு நலப்பணி திட்ட மாணவர் கௌதம்குமார் நன்றி கூறினார்.

Tags : NSS Festival ,Government College ,
× RELATED தந்தை பெரியார் அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறை முப்பெரும் விழா