×

திருப்போரூர் நூலக வாசகர் வட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

திருப்போரூர், அக்.16: திருப்போரூர் கிளை நூலகத்தில் செயல்படும் வாசகர்  வட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது திருப்போரூர் கிளை நூலகத்தில் செயல்படும் வாசகர்  வட்டம் சார்பில் புத்தகம்படி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. வாசகர் வட்ட  தலைவர் ஆர்.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வி.தனஞ்செழியன்,  ஓய்வு பெற்ற டிஎஸ்பி சம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகானந்தன், மகளிர்  மேல்நிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணேசன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி சம்பந்தம், திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர்  சதீஷ்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து  தொடங்கி வைத்தனர்.

பேரணியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 500க்கும்  மேற்பட்ட மாணவ, மாணவிகள் புத்தகம் வாசிக்க வேண்டியதன் அவசியம் குறித்த  பதாகைகளை கைகளில் ஏந்தியபடி நூலகத்தில் இருந்து திருப்போரூர் நான்கு  மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் நூலகம் வரை ஊர்வலமாக சென்றனர். மாவட்ட நூலக அலுவலர் மந்திரம், அரசு மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் அசோகன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா மேரி, அரிமா  சங்க செயலாளர் சீத்தாபதி, செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், நீடு அறக்கட்டளை  இயக்குனர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வாசகர் வட்ட செயலாளர் ரேவதி நன்றி கூறினார்.

Tags : Awareness rally ,Tirupporur ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி