×

₹5 லட்சம் செல்போன்களுடன் கடை உரிமையாளர் ஓட்டம்

தண்டையார்பேட்டை: கேரளாவை சேர்ந்தவர் அபித் உஸ்மான் (48). இவர், வண்ணாரப்பேட்டை சிமென்ட்ரி  சாலையில் கடந்த 9 மாதங்களாக செல்போன் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அகமது (24) என்பவர் வேலை பார்த்து வந்தார். செல்போன் மொத்த விற்பனையாளர்கள் 5 பேர், அவர்களுடைய கம்பெனி செல்போன்களை இவரிடம் விற்பனைக்கு கொடுத்துள்ளனர். அதன்படி, 50க்கும் மேற்பட்ட செல்போன்களை வாங்கிய உஸ்மான், கடந்த வாரம் கடையை மூடிவிட்டு திடீரென மாயமானார்.  இதுகுறித்து செல்போன் கொடுத்த டீலர்கள் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், 5 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை எடுத்துக்கொண்டு அபித் உஸ்மான் மற்றும் கடையில் வேலை பார்த்த  அகமது ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்தனர். புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் கடை உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...