அறந்தாங்கி, அக்.16: அறந்தாங்கி அருகே மணல் கடத்திய லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். அறந்தாங்கி தாசில்தார் சூரியபிரபு, எரிச்சி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வெள்ளாற்றில் இருந்து அனுமதி பெறாமல் மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து அறந்தாங்கி காவல்நிலையத்தில் மேல்நடவடிக்கைக்காக ஒப்படைத்தார்.