×

புதுக்கோட்டை அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு

புதுக்கோட்ைட, அக்.16: புதுக்கோட்டை அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மகன் கோபிகமல் (36). இவர் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லுபட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் கோபிகமல் கல்லுபட்டறையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் கோபிகமலை அரிவாளால் பயங்கரமாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த கோபிகமலை, அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபிகமலை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் கோபிகமலை அரிவாளால் வெட்டி மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி, கோபிகமலின் உறவினர்கள் புதுக்கோட்டை-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : Pudukkottai ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி...