×

புதுக்கோட்டையில் தொழிலாளி கொலையில் 2 பேரிடம் ரகசிய விசாரணை

புதுக்கோட்டை, அக்.16: புதுக்கோட்டையில் நடந்த தொழிலாளி கொலையில் 2 பேரிடம் ரகசிய விசாரணை நடத்துகின்றனர். புதுக்கோட்டை அடப்பன்வயல் 3-ம் வீதியை சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவரது மகன் வினாேத்சக்கரவர்த்தி (35). தொழிலாளி. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் அன்பானந்தத்தின் உறவினரான இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அரிவாளால் வினோத்சக்கரவர்த்தியை பயங்கரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இந்த கொலை குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் 2 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : murder ,laborer ,Pudukkottai ,
× RELATED தாராபுரம் அருகே டிப்பர் லாரி மோதி...