×

இயற்கை சீற்றங்கள் பாதித்தால் காளை மார்க் புதிய கிளை திறப்புவிழா

திருச்சி, அக்.15: திருச்சி மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், தீ விபத்து, நில அதிர்வு ஆகியவற்றிலிருந்து தென்னை மரங்களை பாதுகாக்க தங்களது தென்னை மரங்களை காப்பீடு செய்து கொள்வது அவசியமாகும். இயற்கை சீற்றங்களால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்படும் பட்சத்தில் இத்திட்டதில் இழப்பீடு வழங்கப்படுகிறது.ஒரு ஹெக்டேருக்கு 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும். விவசாயிகள் தாங்கள் காப்பீடு செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு முறை மற்றும் தற்போதைய நிலை குறித்து சரியான முன்மொழிவு அளிக்க வேண்டும்.தென்னை காப்பீடு செய்யம் விவசாயிகள் மரங்களில் வண்ணம் பூசி 1,2,3 என வரிசையாக இலக்கமிட வேண்டும். காப்பீடு பிரீமியத்தில் மானியத்தொகையாக மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவீதம் மற்றும் மாநில அரசு 25 சதவீதம் ஏற்றுக்கொள்கிறது. மீதமுள்ள 25 சதவீதம் பிரீமியத்தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதும்.நன்கு பராமரிக்கப்படும் வளமான காய்கள் உள்ள தென்னை மரங்களை மட்டுமே வயதுக்கேற்ப பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்ய வேண்டும். 4 முதல் 15 வயது வரை உள்ள ஒரு தென்னை மரத்துக்கு விவசாயி செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை ரூ.2.25. அதற்கான காப்பீட்டுத் தொகை ரூ.900. 16 முதல் 60 வயது வரை உள்ள தென்னை மரத்துக்கு ரூ.3.50 பிரீமியம் தொகை. அதற்கான காப்பீட்டு தொகை ரூ.1,750.

எனவே தென்னை மர சாகுபடி செய்யும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி முன்மொழி படிவத்தை பூர்த்தி செய்து பிரீமியத்தை அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட், சென்னை என்ற பெயரில் தக்க வரையோலை எடுத்து அனுப்ப வேண்டும்.அவ்வாறு அனுப்பும்போது தென்னை மர சாகுபடி மேற்கொண்டதற்கான நில ஆவணங்களான தென்னை சாகுபடி சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும். மரங்களுக்கு இழப்பு ஏற்பட்டால் 15 நாட்களுக்குள் காப்பீடு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.தென்னை மரங்களுக்குஇழப்பீடுபெற காப்பீடு அவசியம்விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்காப்பீடில் சேர தகுதிதென்னை சாகுபடி விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடு பயிராகவோ வரப்பில் வரிசையாகவோ வீட்டுத் தோட்டத்திலோ குறைந்தபட்சம் பலன்தரக் கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும். வளமான, மகசூல் தரக்கூடிய மரங்கள் இத்திட்டத்தில் சேர்க்கலாம். ஒரு ஹெக்டேருக்கு சுமார் 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய தகுதியாகும். ஒரே எல்லைக்குள் ஒரே தொடர் பகுதியில் நடவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து தென்னை மரங்களும் காப்பீடு செய்ய வேண்டும்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ