×

திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் 31ம்தேதி சிறப்பு குறைதீர் கூட்டம்

திருச்சி, அக்.15: திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்கூட்டம் வருகிற 31ம்தேதி நடக்கவுள்ளதால் திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர் தாலுகாக்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.திருச்சி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) அலுவலகத்தில் வரும் அக்.31ம் தேதி காலை 11 மணிக்கு பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்களால் அளிக்கப்படும் கோரிக்கை மனுக்கள் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும். எனவே, திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி (கிழக்கு) மற்றும் திருச்சி (மேற்கு), திருவெறும்பூர் தாலுகாக்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.


Tags : Special Oral Meeting ,Trichy RTO Office ,
× RELATED போலீசிடம் தகராறு வாலிபர் மீது வழக்கு