×

கட்டாய நன்கொடை வசூல் சிபிஎஸ்இ பள்ளி துணை முதல்வர் கைது

திருச்சி, அக்.15: திருச்சி மாவட்டம் துறையூர், ஆத்தூர் சாலையில் சிபிஎஸ்சி பள்ளி இயங்கி வருகிறது. விஸ்வநாதன் என்பவர் மனைவி கல்பனா (40) என்பவர் துணை முதல்வராக உள்ளார். இவர் பள்ளி முதல்வராக பொறுப்பு வகித்தபோது, பள்ளியை விட்டு செல்லும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்காக பெற்றோர்களிடம் அதிகளவு கட்டாய நன்கொடை வசூலித்துள்ளார். இதுதொடர்பாக பெற்றோர்கள் பொருளாளரான ராஜேஸ்கண்ணாவிடம் (54) புகார் தெரிவித்தனர். ராஜேஸ்கண்ணா அளித்த புகாரின் பேரில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி விசாரணை நடத்தினார். விசாரணையில் கல்பனா அதிகளவு கட்டாய நன்கொகை வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கல்பனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags : CBSE ,school vice principal ,
× RELATED வரும் கல்வியாண்டில் 3 முதல் 6ம்...