×

திருவிடைமருதூரில் கொலை, கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர், கோர்ட்டில் ஆஜர்

கும்பகோணம், அக். 15: கொலை, கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 3 பேரை திருவிடைமருதூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே நாச்சியார்கோயில் பகுதியில் கொலை முயற்சி, கொள்ளை, கொலை என பல்வேறு வழக்குகள் தொடர்பாக லாலி மணிகண்டன், பிரசாத், அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் திருவிடைமருதூர் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தப்பட்டனர்.  

அப்போது கொலை முயற்சி வழக்கில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேருக்கும் குற்ற பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.  இதையடுத்து 3 பேரும் வருகிற 23ம் தேதி தஞ்சை செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கொள்ளை மற்றும் அழகாபுத்தூரில் நடந்த கிலிங்ஸ்டன் கொலை ஆகிய இரண்டு வழக்குகளில் வரும் 25ம் தேதி திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி நிலவரசன் உத்தரவிட்டார்.

Tags : murder ,robbery ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...