×

அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டி

அரியலூர், அக். 15: அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நேற்று நடந்தது. அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் குடியரசு மற்றும் பாரதியார் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நேற்று நடந்தது. போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யன்னன் துவக்கி வைத்தார். கல்வி மாவட்ட அலுவலர்கள் செல்வராஜ் (அரியலூர்), மணிமொழி (செந்துறை), ஹரிசெல்வராஜ் (உடையார்பாளையம்) முன்னிலை வகித்தனர்.

இதில் 11, 14, 17, 19 என்ற வயதின் அடிப்படையில் 4 பிரிவுகளாக நடந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து 72 மாணவர்கள், 72 மாணவிகள் பங்கேற்றனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் சதுரங்க போட்டியில் பங்கேற்று தகுதி பெற்றனர்.மாவட்ட அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.

Tags : Chess competition ,schoolchildren ,Ariyalur ,
× RELATED நைஜீரிய தீவிரவாதிகள் கடத்திய 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு