×

இலவச வீட்டுமனை பட்டா வேண்டும்

விருதுநகர், அக்.15: இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி அருந்ததியர் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில்  ஆதித்தமிழர் கட்சி மகளிரணி பொறுப்பாளர் ஜோதி தலைமையில் அளித்த மனுவில், சேத்தூர் அருந்ததியர் தெருவில் 60 வீடுகளில் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நிலையில் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர். குடியிருக்க வீடுகள் இல்லாமல் ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் வீடுகள் இன்றி சிரமப்படும் 70 குடும்பங்களுக்கு ஆதிதிராவிடர் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி