×

சாதிச்சான்று வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு

விருதுநகர், அக்.15: சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி புதிரை வண்ணார் சமூக மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். புதிரை வண்ணார் பேரவை செயலாளர் முருகன் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில், வெம்பக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மேட்டூர், மடத்துப்பட்டி, பிள்ளைகனம்பட்டி, அப்பணம்பட்டி, ஏழாயிரம்பண்ணை ஆகிய ஊர்களில் புதிரை வண்ணார் சமூக மக்கள் வசித்து வருகின்றோம். மாவட்டத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு எஸ்சி சாதிச்சான்று வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வெம்பக்கோட்டை வட்டாரத்தில் மட்டும் சாதிசான்று வழங்க மறுத்து வருகின்றனர். கலெக்டர் உரிய விசாரணை நடத்தி சாதிசான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...