×

ராஜபாளையத்தில் சிதறிக்கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு

ராஜபாளையம், அக்.15: ராஜபாளையம் நகர் பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் சிதறிக் கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் சிதறி கிடக்கின்றன. இவற்றில் கால்நடைகள் இரைதேடி சுற்றுகின்றன. அதில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கெட்டுப்போன உணவுகளை உண்டு கால்நடைகள் உடல்நலம் பாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் இறந்தும் விடுகின்றன. எனவே நகர்ப்பகுதிகளில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். அவற்றில் குப்பைகளை சேகரித்து பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். நகர் பகுதிகளில் அதிகளவு திரியும் கால்நடைகளை வளர்ப்பதற்கான வசதிகளை செய்து தர வேண்டும் என மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...