×

இளைஞரை வெட்டியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

தேனி, அக். 15: தன் வீட்டு வாசலில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த தலித் வாலிபரை அரிவாளால் தலையில் வெட்டிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி, தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் அனைத்துக்கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது.தேனி அருகே கோடாங்கிபட்டியில் தன் வீட்டு வாசலில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து மொபைல் போன் பார்த்துக் கொண்டிருந்த தலித் வாலிபர் சுந்தர் என்பவரை அதே ஊரைச் சேர்ந்த தந்தை, மகன் ஆகியோர் அரிவாளால் தலையில் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சுந்தர், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சுந்தரை வெட்டியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, விடுதலைச்சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் சித்திக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சையதுஅபுதாகீர், திமுக மாவட்ட துணைச்செயலாளர் வீனஸ் கண்ணன், ஆதித்தமிழர் பேரவை மாநில துணைச்செயலாளர் வீரபாண்டியன், தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் அலெக்ஸ், சிபிஐ மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags : Demonstration ,arrest ,youth gangsters ,
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...